Friday, 29 March 2019

Why they are calling her as Women - ஏன் அவளை மகளீர் என்கிறார்கள்


ஏன் அவளை  அவர்கள்மகளீர் என்கிறார்கள்?

அவள் விரலும் மனமும்
அவனுக்கு மென்மை என்பதாலா
அவர்கள் அவளை மகளீர் என்கின்றனர்.

விரல் இடுக்கில்
சரிந்து விழும்
சாரல் போல் கோலமிடும்
குழல் பிடித்து
நெருப்பு மூட்டும்
குலப் பெண் என்பதாலா
அவர்கள் அவளை மகளீர் என்கின்றனர்.

அவன் மகவுக்கு தாயாகி
தாய்பாலை வீரமாக்கி
அவனை வளர்பதனாலா
அவர்கள் அவளை மகளீர் என்கின்றனர்.

கரு அறை எனும்
சுவர்கத்தை சமந்து திரிபவள்
கருனை மொழியால்
அவனுக்கு எல்லாமாகி
உருகும் மெழுகு திரியவள்
புரியவில்லை
அவர்கள் ஏன் அவளை மகளீர் என்கின்றனர்?

08/03/2019 women's day poem for Suriyan FM,

Needs your time -வேண்டுவதெல்லாம் உன் நேரம்

வேண்டுவதெல்லாம் உன் நேரம்

ஓய்வு
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

சூரியன் பகலிலும்
சந்திரன் இரவிலும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

அலை கரையுடனும்
கரை அலையுடனும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

ஒளிரும் நட்சத்திரங்களும்
ஓடும் இதயமும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

விரிந்த தரையும்
உயர்ந்த மரங்களும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

ஓடும் ஆறும்
பாயும் நீர்வீழ்ச்சியும்
ஓயாது உழைப்பதனால்தான்
ஓய்வு தேவை.

பாலாய் போன
பல்தேசிய கம்பனிகளால்,
இரவெல்லாம் விழித்து
பகலெல்லாம் உறங்கும்
மனிதர்கள்

முழு உருவமும்
முன்னே இருந்தாலும்
பேசத்துடிக்கும் உதடுகளும்
கனத்த இதயங்களும்
எல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாத
இல்லாலாய் வாழும்
அத்தனை உறவுகளுக்கும்
ஓய்வு தேவை

வேண்டாம் உன் பணம்
வேண்டுவதெல்லாம் உன் நேரம்.

20th March 2019 - Vahavam








Saturday, 7 July 2018

அருள்வாக்கியின் மண் (Soil of Arulvakki Abdul Kadhar)




புற்று மண் எடுத்து
வரிச்சி வீடு கட்டி
பிள்ளை வளர்த்த மண்ணே
எங்கள் மண்

சோற்று பருக்கை இன்றி
ஆற்று நீரை அள்ளி குடித்து
உண்டி வளர்த்த மண்ணே
எங்கள் மண்

அடை மழையில்
குடையும் இன்றி
குடை பிடிக்க வழியுமின்றி
சாக்கு கோணியுடன்,
கடை தெருவுக்கு போகும் மண்ணே
எங்கள் மண்

விளையாட்டு சாமான் இன்றி
மானா குச்செடுத்து
கணக்கு பாடம் படிக்கும் மண்ணே
எங்கள் மண்.
லோடா கம்புடைத்து
கிட்டி விளையாடி
கூட்டாஞ் சோறு சமைக்கும் மண்ணே
எங்கள் மண்

பாக்கு மட்டை பொறுக்கி
தோப்பு முழுக்க இழுத்து
வம்பு கதை பேசி மகிழும் மண்ணே
எங்கள் மண்

தென்னை மட்டை வெட்டி
மாடு என அழைத்து
கழுத்தில் கயிறு கட்டி குறும்புதனமாய்
குறுபான் கொடுக்கும் மண்ணே
எங்கள் மண்

துளிர்த்த மூன்றிலை
தேயிலை நுனியில் தொங்கும்
புனித் துளி கொண்டு
கண் துடைக்கும் மண்ணே
எங்கள் மண்

சாரத்தை மண்டி கட்டி
மலை மலையாய் அணிவகுத்து
தேயிலை கொழுந்து எடுத்து
விரல் முழுக்க கசறு படிந்து
எங்கள் உழைப்பை
உங்கள் சுவைக்காய்
அரப்பணிக்கும் மண்ணே
எங்கள் மண்

படிப்படியாய் வரம்பு கட்டி
குளத்து நீரை அதில் வடித்து
படிமுறை விவசாயம் செய்யும்
பட்டினியை போக்கும்
பாட்டாளியின் மண்ணே
எங்கள் மண்

மலை இடுக்கில் ஒழிந்து
காலையில் கள்ளமாய்
எங்கள் வெண்புறாக்களை
எட்டிப்பார்க்கும் கிழக்கு கதிரவன்
அவன் பொல்லாத கள்ளன்

அவன் மென் கதிர்பட்டு
பனித்துளி வெட்கி
அவள் ஜாலம் காட்டும்
வானவில் தோன்றும்
மொட்டாவை மலையது
எங்கள் மண்

மஞ்சள் முழாம் பூசி
அணி அணியாய்
புல்லு மலைக்கு
ஹஜ் பயணம் செல்லும்
வண்ணத்து பூச்சியிடம்
எங்கள் பிரார்த்தனைகளை
அள்ளி வைத்து
அல்லாஹ்விடம் சொல்லி
நல்லது நடக்க வேண்டும்
என வேண்டும் மண்ணே
எங்கள் மண்

அந்த புல்லு மலையின்
சொந்த காரன் தான்
இன்றைய வகவத்தின் பாடு பொருள்
பாட்டாலே விளக்கேற்றி
பாட்டாலே விளக்கணைத்த
அருள்வாக்கி அப்துல் காதர்
பிறந்த மண்ணே
எங்கள் மண்

பெயரில்லா பாடசாலை ஒன்று
இலங்கை தேசத்தில் உண்டோ
பூவும், காயும்,
கனிதரும் மரமும்,  மணம் தரும்
வாசனை திரவியமும் பெயராகுமோ?
சிங்களப் பெயர் தழுவிய
தமிழ் மொழி பாடசாலை ஒன்று சாத்தியமோ
அந்த புலவர் மலையில் சாத்தியமே
அதன் நுழைவாயிலே வித்துவ தீபமே

எனசல் கொல்ல எனும் பாடசாலை
பெற்றெடுத்த கவி குஞ்சு நான்
பிறந்த மண் அது.
புலவனுக்கும் எனக்கும் உள்ள
உறவு தெரியாது
எங்கள் ஊரில் பிறக்கும்
எந்த குழந்தைக்கும்
இந்த புலவனை தெரியாது இருந்ததில்லை.

நான் இப்போதெல்லாம்……

கொங்கிரீட் காட்டிற்குள்
காணாமல் போன
கதிரவனை தேடுகிறேன்

வானவில்லின் நிறங்களை
மறந்து விட்டேன்.

பனிதுளியில் பட்டு தெறிக்கும்
வர்ணஜாலத்தை சிந்திக்கிறேன்.

இறந்து போன  வண்ணத்துப் பூச்சிகளிடம்
என் எண்ணத்தை சொல்கிறேன்.

தொலைபேசிக்குள் தொலைந்து
என் நேரத்தை சேமிக்கிறேன்.

ஜில் என்ற காற்றை, ஏசி ஏசி
விலை கொடுத்து வாங்குகின்றேன்

பிளாத்திக்கு போத்தலுக்குள்
சின்ன புல்லுகளை வளர்க்கின்றேன்.

என் மண்ணையும்
அதன் மண் வாசனையையும்
குப்பை நிறைந்த என்
அடுப்பறை நினைவுபடுத்துகின்றது.

பிழைப்புக்காய் கொழும்புக்கு    
ஹிஜ்ரத் வந்துள்ளேன்
என் மண்ணை
ஹஜ்ஜதுல் விதா போன்று
சென்றடைய ஆசை வைத்துள்ளேன்.

என் மண்ணின் மைந்தர்களிடம்
நான் மன்னிப்பு கேட்கிறேன்.
எமக்கு ஒரு பாரிய பொறுப்புண்டு

அருள்வாக்கியை கூகுளில் தேடினேன்
மேமனுக்கு கிட்டிய படம்கூட
அங்கு இல்லையே எனவருந்துகிறேன்.

ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி
நாடறிந்த புலவன் - எங்களின்
அடையாள புருஷன் - அவனை
உலகறிய செய்வது
எனதும் உனதுமான கடமை

வகவத்திற்கு நன்றி
வகவ குடும்பத்திற்கு நன்றி
அன்றொரு நாள் விடுத்த வேண்டுகோள்
இத்தனை விரைவில் நிறைவேறும்
என்று நினைக்கவில்லை
செவிமடுத்த உங்கள்
அனைவருக்கும்
அருள்வாக்கியின் மண்ணின் மைந்தனின்
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

31/01/2018, Presented on 45th Vahavam
By: Thahir Noorul Isra

Wednesday, 4 July 2018

Rat box of Asifa (ஆசிபாவின் எலிக் கூடு)






என் வீட்டை சுற்றி
ஓரு சுத்திகரிப்பு
ஆதலால் எலி எல்லாம்
எம் வீட்டுக்குள்.

என் எஜமானை நச்சரித்து
ஓர் எலி கூண்டு வாங்கினேன்
பத்திரமாய் கதவை அடைத்து
புத்தியாய் ஒரு கருவாட்டை சுட்டு
கொண்டியில் கொழுக்கி – மாட்டட்டும்
என் மானத்தை அம்பலம் ஏற்றிய
ஆசாமி என்று நினைத்துக் கொண்டேன்

அப்போதுதான் உற்றுப் பார்த்தேன்
இப்போதெல்லாம் எலிக் கூடு கூட
தனி கூடாகி போனதே.

முன்பெல்லாம் வெளி அரங்கில்
“டக்”; என்று அம்பலமாகும்
கொலைகள் - கள்ளன் யார் என்று
அம்பலமாய் தெரியும்.


இப்போதெல்லாம்,
தனி கூட்டிற்குள்
இரத்தம் சிந்தாமல்
கொலை செய்யப்படாமல்
சித்திரவதை இல்லாமல்
கல்லன் பிடிபடுகிறான்.

அவன் அவமானப்படாமல்,
தனிமையை உணராமல் இருக்க
இடைக்கிடையே ஒரு சொட்டு நீரும்,
நெத்தலி தலையும்
எனக்கு தெரியாமல்
அதனோடு ஏதேதோ பேசுகிறான்
என் வீட்டு எஜமான்.

குதிரையின் கடிவாளம் பிடித்து
அன்பு தங்கை படிக்க உருதுணைசெய்து
தாய்கு பணிவிடையும் செய்து
குலப் பெண்ணாய் வாழ்ந்தாள்
என் தங்கை ( ஆசிபா) அவளுக்கு,

ஓர் எலிக் கூண்டு கூட
பாதுகாப்பாக இல்லாது போனதே....
அப்போது தான் புரிந்தது எனக்கு
கடிவாளம் பிடிக்க தெரிந்தாள் போதாது
தன் கற்பை காக்கும்
கடிவாளத்தையும் பிடிக்க வேண்டும் என்பது.

29/04/2018
Presented in Vahavam

Tuesday, 28 March 2017

Review poem of "Pookalam" Written by Mr. Velimadai Rafeek

                        பூக்காலம்



உச்சம் தொடும்
உன் கவிதைகளில்
எச்சம் உண்டா
என தேடி
என் பேருந்து புரப்பட்டது.
மிச்ச பக்கங்களை புரட்ட
உன் பூக்காலத்தில்
எஞ்சியதெல்லாம் ஒன்றிரண்டுதான்.

உச்சம் தொட்ட வரிகளில்
ஊசலாடும் உன் உயிர்
உதிரம் வடிக்க
என் பேனா மையதை
பதிவிடத் துடிக்கிறது.

ஈன்றெடுத்த பச்சை வயிற்றில்
பெற்றோல் ஊற்றி
தீவைத்தது போல”
உன் கவி வரிகள்
என் உதிரத்தை உரிஞ்சி குடித்தது.

வலிதனிப்பும் நிவாரணமும்”
என்பதை நீ அறிந்திருக்க மாட்டாய்
என்பதை நன் அறிந்திருப்பதனால்
உன்னை ஆவணமாக்க
ஆசைப்படுகிறேன்
நீ அனுமதிக்கும் பட்சத்தில்.

கடைசி நிமிடங்களை
கணித்துக்கொண்டிருக்கும் விரல்களில்
கவிஞன் ஒருவன் கடத்தும்
தரமான வாழ்க்கை தரம் பற்றி
தவறாது பாடம் எடுக்க வேண்டும்
மானுடம் பாடும் தரணியிலே.

அன்புடன்
கவிதாயினி,
தெல்தோட்டை இஸ்ரா

28-03-2017

Quality doughter

அருளாளன் அன்பாளன்,
ஆதாரம் அல்லாஹ்வே
அலிபும் அகரமும்
நன்றே சொல்லி
ஆன்று பல கல்வி
ஈன்றே தந்து
தாளாய் சொர்கம்
மனையில் கொண்டு
மன்னறை வாழ்கை
மகத்தாய் பெற்று
ஈன்றே பேறு
வையகம் தந்து
உற்றம் சுற்றம்
தந்தாய் ரப்பே
அல்ஹம்துலில்லாஹ்

தவமாய் தவமிருந்து
தசாப்தம் கடந்து
தாயம்மா தரணியிலே
ஈன்றெடுத்த
தலைச்சம் பிள்ளை
நானம்மா –அவளின்
தரமான தங்கமகள்

தாலாட்டு அவள் பாட
தாடியிலே நானட– பாச
தாகத்தால் விக்கித்து
தாயென்றார் என் தந்தை
தயவாய் என்னை நோக்கி

மழலை சொல்மாறி
சீராய் கைபிடித்து
சீமைக்கு செல்லையிலே
அவர் கையிருந்த
சிகரட்டை தட்டிவிட
சினத்தோடு எரிந்துவிட்டார்
அவர் ஆறாம் விரலை
புன்முறுவள் பூத்தாள்
என் தாயம்மா
தரமான அவள் மகளின்
தீரச் செயல் கண்டு

ஏட்டறிவு எதுவுமில்லை
எழுத்தறி சிறிதுமில்லை
ஏனியாய் எனக்கிருந்து
ஏற்றிவிட்டு தான் மகிழ்ந்தார்.
பட்டங்கள் அத்தனையும்
பக்குவமாய் அள்ளிவர
அவையிலே முன்னிருந்து
அற்புதமாய் பார்த்திருந்தார்.

பட்டதாரி ஆக்கிடவே
பட்டினியில் பல நாள்
பசியோடு அவரிருந்தார்
பாழாய் போனது
பாசமிகு அவர் உடம்பு

பாத்திருக்க முடியாமல்
பாத்திரத்தில் நீரும்
பத்திரமாய் மருந்துடன்
தரமான தாதியானேன்
தங்க மகள் நான் அவருக்கு

பட்டங்கள் நான் பெற –அவர்
பட்ட துயர் கொஞ்சமில்லை
அரைஞான் கையிர் முதல்
அரை பவுன் சங்கிலி வரை
அத்தனையும் பத்திரமாய்
அடைக்கலம் வங்கியிலே

இருக்குமிடம் தெரியவில்லை
இல்லை என்று சொல்வதில்லை
பத்தியிலே பர்வதம்
பக்குவத்தில் குறையுமில்லை

பள்ளியிலே முதலிடம்
பன்பிலே உயர்விடம்
யார் பெற்ற பிள்ளையென
யாரும் கேட்டிடவே
மார்போடு அனைத்து
மார்தட்டி  சொல்லிடுவார்
கண்மனியில் நீர் வடிய

காலத்தால் பெற்ற பிள்ளை
தான் பெற்ற பெற்றொருக்கு
கையிலே செல்போனும்
காதிலே இயர் போனும்
காலமெல்லாம் - மிச்ச
காலமெல்லாம் அன்புடனே
வாழவென
கனவு இல்ல  மொன்று
இழந்துவிட்ட அத்தனையும்
இரட்டிப்பாய் கொடுத்திடவே
அவள் ஆயள் நீடிக்க பிரார்திக்கின்றார்
அல்லாஹ்வை கேட்கின்றார்
அறிவுரைகள் பகர்கின்றார்

அன்னிக்கு தோழியாய்
கொழுந்தனுக்கு தாயாய்
மாமிக்கு மகளாய்
மாமனாருக்கு புதல்வியாய்
புகுந்த வீட்டை
பிறந்த வீடாய் மாற்றிடு மகளே
எங்கிருந்தாளும் நீ
என் தரமான தங்க மகளே.



#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க

#என்_வழிப்போக்கன் -16/11/2019 #எங்களை_ஏன்_டீச்சர்_பெயிலாகினீங்க  எனும் பிரபல நூலை தமிழாக்கம் செய்துள்ளார் ஜே ஷாஜஹான். வாசல் வெளி...